முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான இங்கிலாந்து நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு, பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்தின் துணைத்தூதர் ஆலிவர் பால்ஹேட்சட், தெற்காசியாவிற்கான வர்த்தக ஆணையர் ஆலன் கெம்மல், தென்னிந்தியாவிற்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனக புஷ்பநாதன், சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்தின் ஆலோசகர் சாம்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



