பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை செல்வி நகர் 70 அடி சாலை, தணிகாச்சலம் நகர் மற்றும் குமரன் நகர் ஆகிய இடங்களில் உள்ள வடிகால்களை ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் செந்தில், சென்னை கோட்டப் பொறியாளர் (மாநகரச் சாலைகள்) சரவண செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.



