கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தக்குமார், துணைமேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலை
மையிலும், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மண்டல தலைவர்கள் கதிர்வேல், மீனாலோகு, தனலட்சுமி, இலக்குமி இளஞ்செல்வி, தெய்வானை,நிலைக்குழு தலைவர் டாக்டர்.பி மாரிசெல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கோவை மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் முன்னேற்ற பணிகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



