கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவர்/ கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், முன்னிலையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அருகில் சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், செல்வராஜ், தாமோதரன், கந்தசாமி, ஜெயராமன், அமுல்கந்தசாமி, வானதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.



