விழுப்புரத்தில் பெட் ரோல் பங்கில் பொது மக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி நூதன முறையில் ராகுல் காந்தி பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
விழுப்புரத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாச குமார் தலை¬ மயில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நூதன முறையில் கொண்டடப்பட்டது.
விழுப்புரத்தில் பெட் ரோல் விலை உயர்வை கண்டித்தும் இதை மக்களுக்கு புரியும் வகையில் பெட்ரோல் பங்குகளில் டோக்கன் மூலம் ஒரு நபருக்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம் என அறிவித்து 200 நபர்களுக்கு பெட்ரோல் வழங்கி நூதன முறையில் பிறந்த நாளை கொண்டாடினர்.
அப்போது மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க கோரியும் காங்கிரஸ் கட்சி யினர் முழக்கமிட்டனர்.