கல்லணையில் ரூ.65 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக, திருச்சிக்கு இன்று (வெள் ளிக்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது.
சென்னையிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த அவருக்கு, விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. ஆட்சியர் சு.சிவராசு மற்றும் அமைச் சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி சிவா எம்பி, எம்எல்ஏக்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, தியாக ராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் உள் ளிட்டோர் மற்றும் அரசு அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். திமுக தொண்டர்களும் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கார் மூலம் கல்லணைக்கு சென்று மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகளைப் பார்வையிட்ட வர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர் உள்ளிட்டமாவட்டங் களில் மேற்கொள்ளப்பட் டுள்ள தூர்வாரும்பணி தொடர் பான புகைப்படங் களைப் பார்வையிட்டார். பின் னர், தூர்வாரும் பணி தொடர்பாக அலுவலர் களுடன் ஆலோசனை மேற் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, வல்லம் முதலை முத்து வாரியிலும், பள்ளிஅக்ர ஹாரம் அருகே உள்ள வெண்ணாற்றிலும் நடை பெறும் தூர்வாரும் பணி களைப் ஆய்வு செய்தார்.
அப்போது நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச் சர் கே.என். நேரு, பள் ளிக்கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழி யன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டா லின், தஞ்சாவூர் மாவட்டத் தில் நடைபெறும் தூர்வா ரும் பணிகளையும், குளங் களையும் பார்வையிட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கவுள்ளார்.
பின்னர் கொடியாலம் வாய்க்கால் தூர்வாரும் பணியை பார்வையிட்ட பிறகு சேலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன.
டெல்டா பாசனத்துக் காக மேட்டூர் அணை ஜூன் 12 ம் தேதி (நாளை) காலை திறக்கப்படவுள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக் கிறார்.