fbpx
Homeபிற செய்திகள்மூளைச்சாவடைந்த 52 வயது பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

மூளைச்சாவடைந்த 52 வயது பெண் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை குடும்பத் தினர் தானமாக வழங்க முன் வந்தனர். இதனால் 6 பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியில் வசிக்கும் பெருமாள் மனைவி ஜெயமணி.(வயது 52). இவரது மகள் மல்லிகா கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார்.

மகள் வீட்டுக்கு கடந்த 8-ம் தேதி மகன் பூபதியுடன் ஜெயமணி வந்திருந்தார். இரு சக்கர வாகனத்தில் மகனுடன் சென்றபோது, நான்கு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காய மடைந்தார்.

உடனடியாக அவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கே.எம். சி.ஹெச். கொண்டு செல் லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது கணவர் பெரு மாள் மற்றும் மகன், மகள் ஜெயமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், மற் றொரு சிறுநீரகம், கண்கள் மற்றும் தோல் கோவையில் உள்ள தனியார் மருத்துவம னைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கே.எம். சி.ஹெச். தலைவர் டாக்டர் நல்லா ஜி பழ னிச்சாமி கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால், அது பல ரது உயிரைக் காப்பாற்ற உதவும். உடல் உறுப்பு தானம் வழங்கிய ஜெயமணி குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img