தமிழகம், கேரளா, பெங்களூருவில் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் 3 இடங்களில் சோதனை நடந்தது.
கேரளாவில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொட ர்ந்து அவர் தொடர்புடைய 23 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் சிங்காரத்தின் வீடு சிவ கங்கை அண்ணா நகரில் உள்ளது. அங்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடந்தது.
கோவை புலியகுளத்தில் வசிக்கும் டாக்டர் தினேஷ் மற்றும் டேனிஷ், பொள் ளாச்சி அருகே அங்கலகுறிச்சியில் உள்ள சந்தோஷ் என்பவரின் வீடும் சோதனையில் சிக் கியது. தேனி, பெரிய குளம் எண்டபுளி அண்ணாநகரில் வசிக்கும் வேல்முருகன் வீட்டிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



