fbpx
Homeபிற செய்திகள்மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை உறுப்பினர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு முன் னாள் முதலமைச்சர் கருணாநிதி யால் 1971ம் ஆண்டு மே மாதம் 25ம் நாள் ஏற்படுத்தப்பட்டது . மாநில திட்டக்குழு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சிக்கு கொள்கைகள் வகுக்கும். இதன் தலைவராகவும் திட் டங்களை ஏற்பவராகவும் முதலமைச்சர் இருப்பார். மாநில திட்டக்குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்கள் உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநிலத் திட்ட குழுவானது கடந்தாண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டது. புதிய அரசு அமைந்திருப்பதால் கொள்கை குழு அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். பேரா சிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலை வராகவும், பேராசிரியர் சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக் கப்பட்டார்கள்.

பேராசிரியர்கள் ம.விஜயபாஸ்கர், சுல்தான் அகமது இஸ்மாயில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தீனபந்து, திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் அமலோற்பவ நாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்தக் குழு அமைக் கப்பட்ட பிறகு முதல் கூட்டம் இன்று சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நியமிக்கப் பட்ட உறுப்பினர்கள் அனை வரும் கலந்துகொண் டனர். அவர்களுக்கென்று தனித்தனி துறைகளும் ஒதுக் கப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

பேராசிரியர் ஜெயரஞ் சன் – விவசாயம் கொள்கை மற்றும் திட்டமிடு தல், பேராசிரியர் சீனிவாசன் – திட்ட ஒருங்கிணைப்பு, பேராசிரியர் ம.விஜய பாஸ்கர் & கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, பேராசி ரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் & விவசாய நிலம் பயன்படுத்துதல், மு. தீனபந்து & ஊரக வளர்ச்சி, மாவட்ட திட்டமிடுதல், டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ & விவசாய கொள்கை மற்றும் திட்டமிடுதல், மல்லிகா சீனிவாசன் & தொழிற்சாலைகள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து.
மருத்துவர் அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் சிவராமன், முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகிய மூவருக்கும் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img