திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மாணவி கவி மு மாஜிதா எழுதிய வண்ணம் பூசிய நிழல்கள்
புத்தக வெளியீட்டு விழா கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் டி.ஜே.எஸ் கல்லூரியில் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பால்வளத் துறை அமைச்சர் நாசர் புத்தகத்தை வெளியிட்டு மாணவியை பாராட்டினார்.
இதில் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.