அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக மாநில தலைவராக மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக மாநில தலைவராக சமூக ஆர்வலரும், மூத்த வழக்கறிஞருமான சுந்தரவடிவேலை அகில இந்திய நிறுவனதலைவர் ஆர்.கே.குமார் நியமித்துள்ளார்.
சமுக நலனில் தனி அக்கறை கொண்டு பல்வேறு உயர் பதவிகளை வகித்த அனுபவம் மிக்க ஒரு ஆளுமை மாநில செயல் திட்டங்களுக்கு தலைமையேற்று உள்ளது பெருமை கொள்ள வைப்பதாக அகில இந்திய நிறுவன தலைவர் ஆர்.கே.குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுந்தரவடிவேலுக்கு அமைப்பின் மாநில பொது செயலாளர் வி.எச்.சுப்பரமணியம், கௌவர தலைவர் தொழில் அதிபர் டி.கே.கார்த்திகேயன், துணை தலைவர் முனைவர் ராஜசேகர், பொருளாளர் ஜான், செயலாளர் சுப்பரமணி, ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், துணை செயலாளர்கள் கார்த்திக், விஜயராவ், மருத்துவ அணி செயலாளர் ரவி,செயலாளர் எஸ்.என்.பாலசுப்ரமணியம் நீலகிரி மாவட்ட செய லாளர் தமிழ்வெங்கடேசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.