இந்த ஆண்டு வட மாநிலங்களில் கடந்த மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் பொது முடக்கம் இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன. இதனால் துணிகளை வடமாநிலங் களுக்கு அனுப்ப முடியாததால் தேக்க நிலை ஏற்பட்டது. விலையும் சரிந்தது. தற்போது வட மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் 2 மாதங்களாக துணிகள் தேங்கியுள்ளன. தமிழகத்தில் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு 2 மாதங்களாக 30 சதவீத துணிகள் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை.
மீண்டும் விசைத்தறி உற்பத்தி தொடங்கினாலும் பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். ஆகவே முழு உற்பத்தியை தொடங்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் சிறு விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அப்போது தான் பாவு நூல் வாங்கி இத்தொழிலை ஆரம்பிக்க முடியும் என்கின்றனர், விசைத்தறி உரிமையாளர்கள். இவர்களது கோரிக்கை நியாயமானதே.
வேலையின்றி எத்தனை நாளுக்குத் தான் விசைத்தறி கூடங்களை மூடி வைத்திருக்க முடியும்? தொழில் இல்லை என்றால் அன்றாட உணவுக்கும் பிற வாழ்வாதாரங்களுக்கும் நெசவுத்தொழிலாளர்கள் எங்கே போவார்கள்? அவர் களுடைய கஷ்டங்களை அறிந்து மத்திய&மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.