கோவையில் இருசக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர் வினியோகம் செய்யும் திட்டத்தை மேற்கு மண்டல காவல்துறை தலை வர் சுதாகர் நேற்று துவக்கி வைத்தார்.
கோவை சீரபாளையம் பகுதியில் உள்ள வேதாந்தா அகா டமி கல்லூரியில் சோனு சூட் பவுண் டேசன் அறக்கட்டளை சார்பாக நோய் தொற்று தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை இலவசமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொடுக்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார். இந்த அறக் கட்டளையானது ஏற்கனவே கர் நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நோய்த்தொற்று பாதிக் கப்பட்டவர்களுக்கு இலவசமாக இருசக்கர வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில், இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வினியோகம் செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆக்சிஜன் சிலிண்டர் தேவை தமிழ் நாட்டில் அதிகரித்து உள்ளது. தற்போது இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மாக இருசக்கர வாகனம் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை அவர்க ளுடைய இடத்திற்கே சென்று கொடுக்கும் பணியை இந்த அறக்கட் டளை செய்து வருகிறது.
தமிழகத்திலேயே முதல் முறை யாக கோவையில் இருசக்கர வாகனங்கள் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் இலவசமாக கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மேலும் இதை படிப்படியாக அதிகப்படுத்த வேண்டும் என கேட்டு உள்ளோம்.
தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையார் பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினோம் அப்பொழுது இ பாஸ் இல்லாமல் பொதுமக்கள் யாரும் கோவை மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
சரக்கு வாகனங்கள் மட்டும் தான் தொடர்ந்து அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.