fbpx
Homeபிற செய்திகள்புதிய வண்ண டைல்ஸ்கள்: ஓரியண்ட்பெல் அறிமுகம்

புதிய வண்ண டைல்ஸ்கள்: ஓரியண்ட்பெல் அறிமுகம்

டைல்ஸ் வர்த்தகத்தில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஓரி யண்ட்பெல்நிறுவனம் தென்னிந்திய வாடிக்கையா ளர்களை கவரும்விதமாக புதிய வண்ணங்களில் பல் வேறு நவீன டிசைன்களில் முன்னெப்போதும் இல் லாத வகையில் புதிய டைல் ஸ்களை அறிமுகம் செய் துள்ளது.

தற்போது இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள டைல்ஸ்கள் அனைத்தும் நவீன தொழில்நுட்பத்தில் புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை எந்தவிதமான கீறல் களும் ஏற்படாமல் நீண்ட காலத்திற்கு உழைக்கும் வகையில் அனைத்தையும் தாங்கும் விதமாக சிறப்பு பூச்சுகளுடன் வெளிவந்துள் ளது. இதன் கடினத் தன் மைக்கான மதிப்பீடு 8 என்ற அளவில் மதிப்பிடப் பட்டுள்ளது.

இது குறித்து ஓரியண்ட் பெல் நிறுவனத்தின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அலோக் அகர்வால் கூறுகையில், எங்கள் டைல்ஸ்கள் அனைத்தும் எந்தவிதமான கிருமிகளையும் அதன் மேற்பரப்பில் தங்கவிடாது. இதன் காரணமாக இது வீட்டிற்கான சிறந்த பாதுகாப்பானதாக இருக்கும். ஆகவே, இந்த டைல்ஸ்கள் கிருமிகள் இல்லாத மற்றும் கீறல் இல்லாமல் நீண்ட காலம் உழைக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது` என்றார்.

படிக்க வேண்டும்

spot_img