மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி ஊராட்சி சிகுப்பட்டி கிராமத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
அதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளரும் மஞ்சம்பட்டி ஊராட்சி தலைவருமான பாரி, துணைத்தலைவர் பார்வதி லிங்கம், தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை பொறியாளர் பாஸ்கர், மேற்பார்வை பொறியாளர் கிரிடா பத்மினி, செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் மாதவன், உதவி மின் பொறியாளர் சுரேஷ், திமுக சிகுப்பட்டி கிளைச் செயலாளர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.