திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பள்ளி மேலாண்மைக் குழுவினை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள், பள்ளியின் வளர்ச்சி குறித்தும் பள்ளியின் சூழல் மேம்படுவதற்கு பெற்றோர் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் விளக்கப்பட் டது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்ப டுத்தவும் தரமான கல்வி கிடைப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான பணி களை செய்து வருவது குறித்தும் விளக்கமளிக்கப் பட்டது.
இந்த கூட்டத்தில் 26 வது வார்டு கவுன்சிலர் கவிதாவிஜி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.