நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் துணை கலெக்டர் (பயிற்சி) லோகநாயகி, கோத்தகிரி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இந்திரா உட்பட பலர் உள்ளனர்.