உர உற்பத்தியில் உலகளவில் முன்னணி கூட்டுறவு நிறுவனமான இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் (இப்கோ), உலகில் முதன்முறையாக நானோ தொழில்நுட்படத்தில் நானோ யூரியாவை உருவாக்கி உள்ளது. இந்த உரத்துக்கு மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
இந்த உரத்தை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில், இப்கோ மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்லைக்கழகம் சார் பில் இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது. இப்கோ மாநில விற்பனை மேலாளர் ஜெயராஜ் வரவேற்றுப் பேசினார்.
இப்கோ பொதுமேலாளர் டாக்டர் ரமேஷ் ராலியா, நானோ யூரியாவின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கம் அளித்தார். 500 மில்லி நானோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளித்தால் மகசூல் 7 முதல் 8 சதவீதம் அதிகரிக்கும் என்றும் மாசு பாடு தவிர்க்கப்படுவதோடு மனிதர்களுக்கோ மண்புழு, தேனீ போன்ற பூச்சிகளுக்கோ தீங்கு விளைவிக்காது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்க லைக்கழக துணைவேந்தர் குமார், ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசுகையில் நானோ யூரியா விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்றும் இன்னும் பல நானோ தொழில் நுட்பங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தனர்.
நானோ யூரியாவை கூட்டுறவு விற்பனை முறையிலும் தனியார் கடைகளிலும் இப்கோவின் ஷ்ஷ்ஷ்.வீயீயீநீஷீதீணீக்ஷ்ணீக்ஷீ.வீஸீ மின் வணிக தளத்திலும் விவசாயிகள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நிறைவில் இப்கோ துணை மேலளார்சுரேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடு களை கோவை இப்கோ கள அலுவ லர் சு.மாரியப்பன் செய் திருந்தார்.
இந்த நிகழ்வில் ஆன்லைன் முறையில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதோடு யூடியூப் மூலம் 7 ஆயிரம் விவசாயிகளும் பார்த்து பயன்அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.