பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.