fbpx
Homeபிற செய்திகள்நாகசாய் டிரஸ்ட் - விவசாயிகள் சங்கம் நடத்திய தடுப்பூசி முகாம்

நாகசாய் டிரஸ்ட் – விவசாயிகள் சங்கம் நடத்திய தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் அரசு சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை நாகசாய் டிரஸ்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய தடுப்பூசி முகாம் சாய்பாபாகோவில் வளாகத்தில் நடைபெற்றது.


துவக்க நிகழ்விற்கு நாகசாய் டிரஸ்டின் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார்.


தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளாமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, பின்னர் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு சமூக விலகலை பின்பற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img