fbpx
Homeபிற செய்திகள்தென்மேற்கு பருவமழை: கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

தென்மேற்கு பருவமழை: கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு முன்னேற் பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெய சந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், இழப்புகளை தவிர்க்கும் நோக்கத்திலும் பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மழை, வெள்ளம், புயல், இடி மற்றும் மின்னல் போன்ற பேரிடர்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முன்னெச்சரிக்கை செயலியான TNSMART App மற்றும் மின்னல் முன்னெச்சரிக்கை செயலியான DAMINI Mobile App ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும். துறை சார்ந்த அலுவலர் கள் பணிகளை மேற்கொண்டு தென் மேற்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீர்நிலைப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட ஆறுகள், கால்வாய்களை தூர்வாரி நீர்வழிப்பாதை உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கழிவுநீர் பாதைகளை சீர் செய்ய வேண்டும். தற்காலிக நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவையான பொக்லைன், மர அறுவை எந்திரங்கள், வாகனங்கள், ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை செய்ய வேண்டும்.

மேலும், தாழ்வாக உள்ள மின் கம்பிகள், பழுதடைந்த மின் கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு மாத்திரைகள், முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை போதிய அளவில் உறுதி செய்ய வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தென்மேற்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி, ஓசூர் உதவி கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரிய சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் குருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img