fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரியில் ரத்ததானம் வழங்கிய வணிகர்கள்

தர்மபுரியில் ரத்ததானம் வழங்கிய வணிகர்கள்

தர்மபுரி அனைத்து வணிகர் சங்கம் மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தர்மபுரி வர்த்தகர் மஹாலில் ரத்ததான முகாம் நடந்தது.

இதனை தர்மபுரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கத் தலைவர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார். செயலாளர் கிரிதர், பொருளாளர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் சந்திரமோகன், வினோத், கார்த்திகேயன், ராஜா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொன்டனர்.


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் ரத்த தானம் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img