fbpx
Homeபிற செய்திகள்தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் கல்வி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, மாணவர் சேர்க்கைக்கு இணைய வசதியில் விண்ணப்பிக் கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

ஏழை, எளிய, நலிவுற்ற பிரிவினரின் குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதி செய்யும் வகையில், கட்டாயக் கல்விச் சட் டம் 2009ன் படி, சிறு பான்மையற்ற, சுயநிதி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய அறி வுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து சிறு பான்மையற்ற, தனி யார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த பகுதியின் அருகில் (சுமார் 1 கி.மீ.) நுழைவு நிலை வகுப்புகளில் (எல். கே.ஜி அல்லது முதலாம் வகுப்பு) சேர்க்கை வழங் கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாடு அரசு கல்வித் துறையின் இணையத் தின் மூலம் வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டிருந்தால் பெற்றோருக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை அந்த பள்ளியிலேயே இணைய வழியில் பத வேற்றம் செய்யலாம்.

முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் போது புகைப் படம், பிறப்புச்சான்றிதழ், இரு ப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முன்னுரிமை கோரும் நபர் என்றால் அதற்கான ஆவணம், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img