fbpx
Homeபிற செய்திகள்தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது கோவை- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி செல்கிறது கோவை- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தகவல் தொழில்நுட்பத் துறையில் கோவை மாநகரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது. மின் கட்டண உயர்வை பொறுத்தவரை நியாயமானது. விலைவாசி உயர்வு காரணமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம் £ள் மகளிர் கல்லூரியில், தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், பல்வேறு தொழில் நுட்பம் சம்பந்த மான கருத்துகளையும் புதிய தொழில்நுட்பம் புகுத்துதல், தற்போது கோவை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது போன்ற தகவல்களை எடுத்துரைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

கோவை மாநகரம், மிகச் சிறந்த வளர்ச்சியை நோக்கி செல்கிறது, என் பதை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களிடம் திறன் மேம்பாட்டு பயிற்சி வளர்க்கப்பட வேண்டும்.
தமிழகத்தை பொறுத்த வரை அமைதி பூங்கா.

சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர். கோவையை பொ றுத்தவரை அமைதியாக உள்ளது. அமைதியை சீர்குலைக்கும்விதமாக சிலிண்டர் விபத்தை நான் பார்க்கிறேன். வன்முறை, தீவிரவாதம் போன்றவற்றுக்கு எதிராக தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

கோவையின் காவல் துறையினர் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
ஐடி துறையை பொறுத் தமட்டில் தமிழகத்தை நம்பி வரும் அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்து வருகிறோம். ஐடி துறை நடத்துவதற்கு, முறையான, பாதுகாப்பு இருக்க வேண்டும்.

அவர்களுக்கான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பை அரசு ஏற்படுத்தி தருவதில் முனைப்பாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் 10 % இருந்த இத்துறை தற்போது 20 % கூடுதலாக இயங்கி வருகிறது.

மின்கட்டணம், நியாயமான மின்கட்டணமாக உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக மின்கட்டணம் உயர்வு அடைந்துள்ளது. இதில் குறை இல்லை என்றார்.

படிக்க வேண்டும்

spot_img