சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உதவும் வகையில் சேலம் கோல்டன் கேட்ஸ் பள்ளி தாளாளர் சேது, மீனா சேது, சேலம் நகரத்தார் சங்கத்தின் ஒத்துழைப்புடன் தலா 1000 ரூபாய் மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை தொகுப்பை மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் முன்னிலையில் வழங்கினார்கள்.
இதில் சேலம் நகரத்தார் சங்கத்தின் துணைத் தலைவர்கள் விநாயகா, சுப்ரமணியன், லேணா சுப்பிரமணியன், செயலாளர் ஆறுமுகம் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.