முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சென்னை மற்றும் தமிழ்நாடு சில்லரை வணிக அமைப்பின் சார்பில் ஹாஸ்புரோ குளோதிங் நிறுவனத்தின் இயக்குநர் கஹைல் சத்தார் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 66 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், கோவை பழமுதிர் நிலையத்தின் தலைவர் நடராஜன், வாசப் சலவை நிறுவனர் பாலச்சந்தர் ஆகியோர் உள்ளனர்.