கொரோனா கால ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் தவிப்பவர் களுக்கு ஒண்றிணைவோம் வா.. எனும் திட்டத்தில் தி.மு.க.வினர் உதவி செய்ய வேண்டும் என தமிழக முதல்வரும் தி.மு.க.தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரது ஆணைப்படி, கோவை தி.மு.க வடக்கு மாவட்டம், சுகுணாபுரம் பகுதி கழகம் சார்பாக கோவைபுதூர், குளத்துப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் முட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பத்தாயிரம் பேருக்கு வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக ஆயிரம் பேருக்கு வழங்கும் வகையில், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.
இதில் சுகுணாபுரம் பகுதி பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவரது ஏற்பாட்டில் நடைபெற்ற இதில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி மற்றும் முட்டைகளை வழங்கினர்.
முன்னதாக பொதுமக்கள் அனைவருக்கும் முக கவசங்கள் வழங்கி, அனைவரையும் இருக்கை யில் அமர வைத்து சமூக இடை வெளியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதி, வட்டக்கழகம், கிளை நிர்வாகிகள், மகளிர் அணி உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.