கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் பல கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
கேரளாவின் பாலக்காட்டில் இருந்து 46 கி.மீ தூரத்தில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. சிறுவாணி நீர் திட்டம் 1983 இல் தொடங்கப்பட்டது.
சிறுவாணி அணையின் உயரம் 49.5 அடி. நீர்ப்பிடிப்பு பகுதி 22.40 சதுர கி.மீ. தற்போது, அணையின் நீர்மட்டம் 25.9 அடியாக உள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் ஒரு சுரங்கப்பாதை வழியாக தமிழக எல்லையில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றுக்கு கொண்டு வரப்படுகிறது. நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக் கப்பட்டு, 1000 மிமீ விட்டம் கொண்ட பிரீகாஸ்ட் கான்கிரீட் குழாய் வழியாக கோவைக்கு கொண்டு வரப்படுகிறது.
சிறுவாணி அணையில் இருந்து தினமும் 101 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோவை மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்களுக்கு முறையே சுமார் 98 மற்றும் 3.40 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது
இத்திட்டத்தால் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 10 கிராம பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் 14.80 லட்சம் மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
அணையை ஆய்வு செய்த அமைச்சர் ராமச்சந்திரன், உலகின் இரண்டாவது மிக சுவையான நீர்நிலையானது சிறுவாணி நதி என்று அவர் கூறினார். அவருடன் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அன்வர்டின், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் வந்தனர்.