சர்வதேச அளவி லான இந்தோ& நேபாளம் சாம்பியன் ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2-ந் தேதி நேபாளத்தில் தொடங்கியது.
தொடர்ந்து 6-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட் டியில் நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர் கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா சார்பில் கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட கோட்டைப் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி மாணவர் துஷ் யந்த் 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிலம்பம், ரெட்டை வாள் வீச்சு போட்டிகளிலும், அன்பரசு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சுருள் வாள் வீச்சு போட்டியிலும் பங்கு பெற்றனர். இதில் 2 பேரும் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
சர்வதேச போட்டியில் தங்கம் வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த துஷ்யந்த், அன்ப ரசு ஆகியோருக்கு பள்ளி யில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் சர்க்கார் சாமக்குளம் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு கலந்து கொண்டு மாணவர் களை பாராட்டி பரிசுகள் வழங்கி பேசினார்.
அப் போது, தங்கம் வென்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இதே போன்று அனைத்து மாணவர்களும் போட்டிக ளில் கலந்து கொண்டு பெற் றோருக்கும், ஆசிரியருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி யில் தலைமை ஆசிரியை ஜெபபிச்சை மெடோஸ், ஆசிரியர்கள், பள்ளி மாண வ-மாணவி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.