fbpx
Homeபிற செய்திகள்கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகத்தில் மரம் நடும் விழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய வளாகத்தில் மரம் நடும் விழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மைநிலைய வளாகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆ.பழனிச்சாமி தலைமையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்ட இந்த நிகழ்வில், மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர் மற்றும் முதல்வர் என்.ஸ்ரீதர், கூட்டுறவு ஒன்றிய சார் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நா.பாரதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img