கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அரசு, மருத்துவபணியாளர்கள் மற்றும் சமூகத்திற்கு, வாக்கரூ இன்டர்நேனஷல் நிறுவனம் தொடர்ந்து உதவி வருகிறது.
இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப் புறுதி பிரிவான வாக்கரூ பவுண்டேஷன் கோவை இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெறும் கோவிட் தொற்று நோயாளிகளுக்காக ரூ.4,82,000 மதிப்புள்ள மருந்துகளை தானமாக வழங்கியிருக்கிறது.