கோவையில் கொரோனா பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கும் நலிவடைந்த மக்களுக்கும் இலவச ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சி மீட்டர் சந்திரன் யுவா பவுண்டேஷன் வழங்குகிறது.
கோவையில் கோவிட் தொற்று மீட்பு பணியாக சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், பல்வேறு நிவாரண நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை ஊரடங்கு காலத்தில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இப்பணிக்கான நன்கொடையாக விஸ்வபோதி பவுண்டேஷன், 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை நன் கொடையாக அளித்துள்ளது. மேலும் 15 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
இதனுடன் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் ஆக்சிமீட்டர் மற்றும் டிஜிட்டல் தெர்மோ மீட்டர் மற்றும் அனைத்து கோவிட் தொற்று பாதுகாப்பு கருவிகளை வழங்கி யுள்ளது. வீட்டுத்தனிமையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறும் நிலை ஏற்பட்டால் எங்களது ஆக்சிஜன் செறிவூட்டியை மற்றும் ஆக்ஸி மீட்டர்களை வாடகையின்றி பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். நோய் சரியானவுடன் அதை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
சந்திரன் யுவா பவுண்டேசன் தலைவர் கூறுகையில், “ஏழை, எளிய நலிவடைந்த மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கு ஏற்படும் பாதிப்பு, அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு இந்த சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது,” என்றார்.
சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சசிகலா சத்யமுர்த்தி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங் காவலர் சிவநேசன், விஸ்வபோதி பவுண்டேசன் இயக்குனர் நரேஷ் ரங்கா, ஒருங்கிணைப்பாளர் ஸ்வாதி ஆகியோர் அவரவர் வளாகத்தில் இருந்தவாறே இந்த இலவச சேவையை துவக்கி வைத்தனர்.
இந்த இலவச சேவையை பயன்படுத்த விரும்புவோர் http://limitless360.org/superhero/superhero_limitless.apk என்ற இணைப்பை பயன்படுத்தி செயலியை பெறலாம்