fbpx
Homeபிற செய்திகள்கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் புதிய நடைமுறை

கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் புதிய நடைமுறை

கோவையில் தடுப்பூசி மையங்களில் பொது மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக மாநகராட்சியில் ஒரு நாளும், ஊரகப் பகுதிகளில் ஒரு நாளும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதாரத் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தவிர தொழிற்சாலை பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்து கட்டணம் பெற்றுக் கொண்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பெரும்பா லான மக்கள் அரசு மையங்களுக்கே வருகின்றனர். பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒவ்வொரு மையத்திலும் தினசரி 150 முதல் 200 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதனால் அதிகாலையிலேயே தடுப்பூசி மையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக மாநகராட் சியில் ஒருநாள், ஊரகப் பகுதிகளில் ஒருநாள் என்று தடுப்பூசி செலுத்தும் புதிய நடைமுறையை சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தடுப்பூசி இருப்பை பொறுத்து ஒவ்வொரு மையத்திலும் 150 முதல் 200 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஒவ்வொரு மையத்திலும் அதிகளவு மக்கள் வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையை தவிர்க்க ஒரு நாள் மாநகராட்சியிலும், மறு நாள் ஊரகப் பகுதிகளில் உள்ள மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மையத்தில் 400 முதல் 500 தடுப்பூசிகள் வரை செலுத்த முடியும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியும்.

அதன்படி நேற்று ஊரகப் பகுதிகளில் மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நடைமுறையால் எந்தவித பிரச்சினையுமின்றி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது. அதே போல் இன்று மாநகராட்சியில் மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். தொடர்ந்து ஒருநாள் மாநகராட்சியிலும், ஒரு நாள் ஊரகப் பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும். இதனால் பொது மக்களும் அதி காலையில் சென்று காத்திருப்பது, தடுப்பூசி கிடைக்காமல் திரும்புவது போன்றவை தவிர்க்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img