fbpx
Homeபிற செய்திகள்கோவில் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணம்: அமைச்சர் காந்தி வழங்கினார்

கோவில் பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணம்: அமைச்சர் காந்தி வழங்கினார்

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரி, பணியாளர்கள் 346 நபர்களுக்கு தலா ரூ.4000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் விழா கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி  கலந்து கொண்டு ரூ.4000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார்.

அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், அணைகட்டு  ஜோலார் பேட்டை தேவராஜ், வேலூர் கார்த்திகேயன், ஆம்பூர்,  விஸ்வநாதன், திருப்பத்தூர், நல்லதம்பி, ஆற்காடு, ஈஸ்வரப்பன், குடியாத்தம், அமலு, விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img