தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் லாயல் டெக்ஸ்டைல்ஸ் மில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸி ஜன் உற்பத்தி இயந்திரத்தை திமுக மகளிரணிச் செயலாளரும்,
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலை வருமான கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.
மேலும், உத்தர் பாரதிய நலசங்கம் சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் கான்ஸென்ட்ரேட்டர் மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் கனிமொழி எம்பி முன்னிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதா ஜீவன், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, நகரச் செயலாளர் கருணாநிதி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.