கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத் துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாக னத்தில் அனுப்பப்பட்டார்.
தொடர்ந்து, அரசு மருத்துவம னையில் கொரோனா மேல் சிகிச் சைக்காக அவரை மருத்துவ பணி யாளர்கள் அழைத்துச் சென்றனர். இந்தசூழலில், ஆம்புலன்ஸ் வாகனத் தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் காலியாகி இருக்கிறது. இதனால் புதிய சிலிண்டரை பொருத் தும் பணியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஈடுபட்டுள் ளனர். அப்போது சிலிண்டரில் இருந்து ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு வெடித்தது.
இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு சற்று நேரம் முன்பு தான் நோயாளி ஆம்புலன்சில் இருந்து வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அங்கி ருந்து வெளியேறிய நிலையில் யாருக் கும் எந்தபாதிப்பும் ஏற்பட வில்லை.
உடனடியாக மருத்துவமனை தீயணைப்பான்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். பொது மக்களும் அவர்களுக்கு உதவினர். இதனிடையே தீவிபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஆம்புலன்சில் பிடித்திருந்த தீயை அணைத்தனர்.
ஆம்புலன்சின் கீழ் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த சிலிண்டரில் தீப்பற்றும் முன் தீயணைப்பு படையினர் மீட்டு அப்புறப்படுத்தினர்.
ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், டீன் டாக்டர் நிர்மலா மற்றும் போலீஸ் காவல் துணை ஆணையர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அரசு தலைமை மருத்துவமனையிலும் அந்தப்பகுதியி லும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.