இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நாடே கவனம் செலுத்திக் கொண் டிருக்கும் நேரத்தில், உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களைப் பெறுவதே சிலருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு இதில் உதவும் பணியில பியர்ஸ்டோர்ப், நிவியா இந்தியா மற்றும் யுனை டெட் வே இந்தியா ஆகியவை இணைந்து முன் வந்துள்ளது.
பியர்ஸ்டோர்ப்பின் ‘சருமத்திற்கு அப்பால் பராமரிப்பு’ உதவித் திட்டத்தின் மூலம், பல் வேறு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் தேவைக ளுக்கான நிவாரணம் வழங்கும் பணிகளில் இறங் கியுள்ளது.
நிவியா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் நீல் ஜார்ஜ் கூறுகையில், “தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சவால்களை உணர்கிறோம். ஒரு பொறுப்பான நிறுவனம் என்கிற வகையில், எங்கள் சமூகங்களில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களில் எங்கள் பங்க ளிப்பை மையப்படுத்த விரும்புகிறோம், அவர்களை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் நினைக்கிறோம்” என்றார்.
இந்த புதிய கூட் டாண்மை மூலம், தமிழ கத்தின் 9 முக்கிய மாவட் டங்களான தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய இடங்க ளில் உள்ள உள்ளூர் திட்டங்களுக்கு உதவி வரு கிறது.
கொரோனா தடுப்பு பணி:
யுனைடெட் வே இந்தியாவுடன் இணைந்து பீயர்ஸ்டோர்ப், நிவியா இந்தியா சேவை