- தமிழக அரசு எச்சரிக்கை:
மருத்துவமனை உரிமம் ரத்து - –
- கொரோனா சிகிச் சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
- கொரோனா பரவலை தடுக்க தொற்று பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை தமிழக அரசு அதிகரித்ததோடு, பல்வேறு இடங்களில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களையும் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் தற் போது கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்ற புகார் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல ஆச்சிஜன் தட் டுப்பாட்டால் உயிரிழக்கும் அபாயமும் அறவே நீங்கி விட்டது. போதுமான ஆக்சிஜன் கையிருப்பில் இருக்குமாறு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இருப்பினும் சில தனியார் மருத்துவமனை களில் கொரோனா சிகிச் சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் ஒரு மருத்துவமனையில் அதிக கட்டணம் பெற்ற தற்காக கொரோனா சிகிச்சை அளிக்க அம்மருத்துவமனைக்கு தடை விதிக்கப்பட்டது. இது போன்ற பல புகார்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் கொரோனா சிகிச் சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூ லிப்பதால் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து சிகிச்சை வழங்க வேண்டும் என நாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண் முகசுந்தரம் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பான புகார்களை அறிவிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்தப் புகார்கள் மீது தனிப்பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரி வித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அந்த புகார்கள் மீது முறையாகப் பரிசீலித்து சரியான முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை இருமடங்காக அதிகரிக்க பரிசீலிக்குமாறும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
இனியும் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.