fbpx
Homeபிற செய்திகள்‘கொரோனா காலகட்டத்தில் தன்னலமற்ற சேவை’ பட்டமளிப்பு விழாவில் செவிலியர்களுக்கு புகழாரம்

‘கொரோனா காலகட்டத்தில் தன்னலமற்ற சேவை’ பட்டமளிப்பு விழாவில் செவிலியர்களுக்கு புகழாரம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் 34 -ஆவது பட்டமளிப்பு விழா எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவினைச் சிறப் பிக்க சிறப்பு விருந்தினராக டாக்டர் ரி.ராமு, ஸிஸி செவிலியர் நிறுவனத்தின் டீன் கலந்து கொண்டார்.

எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி தலைமை தாங்கினார். ஸ்ரீ இராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் டி.நிர்மலா, வரவேற்றார்.

முதுகலை பட்டதாரிகள் 13, 206 இளங் கலை பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு 12 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

துணை முதல்வர் டாக்டர் எஸ். கிரிஜாகுமாரி சிறப்பு விருதுகளை அறி வித்தார்.
இளங்கலை பட்டப் படிப்பில் 2015, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் பயின்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளான கே.ராஜா, எஸ்..சந்தியா, ரஹ்மத் நிலோபர் நிஷா ஆகியோருக்கு தலை சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

முதுகலை பட்டப்படிப்பில் 2017, 2018, மற்றும் 2019 ஆண்டுகளில் பயின்று முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவிகளான பி.கீர்த்தி, ஆர்.சுவிதா, எம்.காயத்ரி ஆகியோருக்கு தலை சிறந்த மாணவருக்கான தங்கப்பதக்கம் வழங்கப் பட்டது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆர்ஆர் செவிலியர் நிறுவனத்தின் டீன் டாக்டர் கே.ராமு பேசுகையில், செவிலியர் துறை மகத்தான துறை. செவிலியர்கள் தன்னம்பிக்கை, அறிவுத்திறன் மற்றும் செயல்திறனுடன் பணிபுரிய வேண்டும்.

தங்கள் சேவையின் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தில் செவிலி யர்களின் தன்னலமற்ற சேவை பெரிதும் பாராட்டுக்குரியது என்றார். பேராசிரியர் சித்ரா வில்ஸன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img