fbpx
Homeபிற செய்திகள்கொரோனா ஊரடங்கு: நலஉதவிகள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம்

கொரோனா ஊரடங்கு: நலஉதவிகள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம்

தமிழகத்தில் கொரோ னா பெருந் தொற்றின் காரணமாக பொதுமக்களை பாதுகா க்கும் வகையில் கடந்த முறை ஊரடங்கின் போது பூஞ்சுத்தி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

தற்போது இரண்டாவது முறையாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பூஞ்சுத்தி ஊராட்சியில் வசிக்கும் சுமார் 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட் கள், மற்றும் தமிழக அரசால் பரிந்துறை செய்யப் பட்டுள்ள கொரோனா நோய்தடுப்பு மருந்தான கபசுர குடிநீர், மற்றும் வைட்டமின் மாத்தி¬ ரகள் அடங்கிய மருத்துவ தொகுப்பு வழங்கப் பட்டது.

இவை பூஞ்சுத்தி ஊராட்சிமன்ற அலுவல கத்தில் தலைவர் ராமநா தன் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ் ச்சியில் மேலூர் ஒன்றிய சேர்மன் பொன்னு ச்சாமி, ஒன்றியகவுன்சிலர் செந்தில்முருகன், ஆடிட்டர் சங்கரநாராயணன், பொறியாளர் பாலச்சந்தர், துணை வட்டாட்சியர் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணா யிரம், வருவாய் ஆய்வாளர் ரவி, கிராமநிர்வாக அலுவலர் ராஜ்குமார், பார்மாபேப்ரிக்கேஷன் நிறுவனர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img