fbpx
Homeபிற செய்திகள்கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறும் அமைச்சர் சாமிநாதன் நம்பிக்கை

கொரோனா இல்லாத மாவட்டமாக திருப்பூர் மாறும் அமைச்சர் சாமிநாதன் நம்பிக்கை

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைச்சர் சாமிநாதன் மூலமாக வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக ஒரு நிமிடத்திற்கு 5 லிட்டர் ஆக்சிஜனை செறிவூட்டக் கூடிய திறன் கொண்ட 10 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பாக திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆக்சிஜன் சிலிண்டர்களை செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், விரைவில் திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் எனவும் அதற்கு பொதுமக்கள் முகக்கவசம் , சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதாரத் துறையின் அனைத்து வழிகாட்டு நெறிமுறை களையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் , மாவட்ட ஆட்சியர் வினீத் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img