கோவை கொரோனா சிகிச்சை மையத்தில் 400 படுக்கைகளுக்கு ஏற்படுத் தப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கர பாணி தொடங்கிவைத்தார்.
கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் அளவு, வயது, மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் தற்காலிக சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏ, இ, டி என மூன்று பெரியஅரங்குகளில் மொத்தம் 755 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மிதமான பாதிப்புள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.ஒவ் வொரு அரங்கத்திலும் சிகிச்சை அளிக்க ஏதுவாக 9 மருத்துவர்கள், 54 செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வரு கின்றனர்.
இங்கு சிகிச்சை பெறுப வர்களுக்கு கொரோனா தொற்று தீவிரம் அடைந்து ஆக்சிஜன் தேவைப்படும் போது அருகில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பும் நிலை இருந்தது. இதைத் தவிர்ப்ப தற்காக ‘டி’ அரங்கில் 400 படுக்கைக ளுக்கு ஆக்சிஜன் செறிவூட் டும் கருவி வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தொடங்கிவைத்தார்.
இம்மையத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை மருத்துவர்களும் செவிலியர் களும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, 12 மருத்துவர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கான பணி ஆணையையும் அமைச்சர் வழங்கினார். அப்போது, மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.