fbpx
Homeபிற செய்திகள்காவேரிப்பட்டணத்தில் வணிகர் சங்கங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

காவேரிப்பட்டணத்தில் வணிகர் சங்கங்கள் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

காவேரிபட்டினம் துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் துணை கிளை, மற்றும் அனைத்து வணிகர் சங்கங்கள் உடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, அனைத்து வணிகர் சங்கத் தலைவர் மோகன், பொருளாளர் சம்பத், ரெட்கிராஸ் செயலாளர் செந்தில்குமார், அரசு சமுதாய உடல்நல மைய மருத்துவர்கள் சோமசுந்தரம், இவாஞ்சலின் ஆகியோர் முன்னிலையில் ஜவுளி சங்க தலைவர் விவேகானந்தன் முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுச் சென்றனர்.

மேலும் இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, மணிவண்ணன், கபிலன், வில்லியம்ஸ், அசோக் மற்றும் வணிகர் சங்க நிர்வாகி சங்கர் ரெட் கிராஸ் நிர்வாகிகள் சண்முகம், பிரதீப் குமார், குமரன், முபீஷ்பாஷா, கார்த்திக், இலக்கியா நியூஸ் பேப்பர் ஏஜென்ட் சமரசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img