உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்& உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்: ஏனென்றால் மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது. (முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உரை).
நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில், வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது. மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு வேலை வாய்ப்பளித்தல், தொழில்துறை முன்னேற்றம், பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு எனப் பல்வேறு இனங்களிலும் வேளாண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் 70 சதவீத மக்களுக்கு வேளாண்மைத் தொழிலே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. வேளாண்மையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறு மாற்றமும் தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு, வேளாண் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
குறைந்த அளவு நில உடைமை, வேளாண் அல்லாத இதர பயன்பாட்டிற்கு விளைநிலங்களை மாற்றுதல், கணிக்க இயலாத பருவநிலை, விவசாயத் தொழி லாளர்கள் பற்றாக்குறை, வேளாண் விளை பொருட்களைச் சந்தைப் படுத்துதல் ஆகியவை வேளாண் தொழில் சந்திக்கும் பெரும் சவால்களாகும்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் தொழிலினை மேம்படுத்தி வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெப்பம், மழையளவு, மண்வளம் ஆகியவற்றிற்கேற்ப பயிர் ரகங்களும், உற்பத்தியை பெருக்கிட நவீன தொழில் நுட்பங்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உரு வாக்கிட விவசாயிகளின் நலன் சார்ந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற பெரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை வேளாண் பொறியி யல் துறை,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டிலுள்ள 12524 கிராம பஞ்சாயத்துக்களில் ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர்பாசன முறையினை பின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன்கள் வழங்குதல், வருவாய் துறையின் மூலம் நிலப்பட்டா மாறுதல் வழங்குதல், நீர்வள ஆதாரத்துறை & ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைகளின் மூலம் ஏரி மற்றும் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இத்திட்டம் 2021-&22ஆம் ஆண்டில் 2,500 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண்மை மற்றும் சகோதரத் துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து மொத்தம் ரூ.1245.45 கோடி ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக மாநில அரசு கூடுதலாக நிதி ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 61 கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறுகிறது.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாக கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல்,நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுதல்,கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் புதிய பட்டா/ பட்டா மாறுதல் செய்து வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவுபயிர் கடன்கள் வழங்குதல்,கால்வாய்,பாசன நீர் வழிதடங்களை தூர்வாருதல் போன்ற பணிகள் முக்கிய பணிகளாக உள்ளது.
இத்திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை,நீர்வள ஆதாரத் துறை, எரிசக்தி துறை, கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்சமயம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் பண்ணை கருவிகளை வழங்குவதற்கு மாநில நிதியிலிருந்து தமிழக அரசு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.43,09,000/- (ரூபாய் நாற்பத்து மூன்று லட்சத்து ஒன்பதாயிரம்) நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றில் 61 கிராம பஞ்சாயத்துகளுக்கு மொத்தம் 187 வேளாண் கருவிகளின் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
ஒரு தொகுப்பில் கடப்பாரை, மண்வெட்டி, களைகொத்தி, மண்சட்டி தலா ஒன்றும் கதிர் அறுப்பான் இரண்டும் என்பன போன்ற வேளாண் கருவிகள் உள்ளது. பொது பிரிவு விவசாயிகளுக்கு 75% மானியத்திலும், பட்டியல் பிரிவு விவசாயிகளுக்கு 90% மானியத்திலும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த ராமநாதபுரம் மாவட்டம், தெற்குத்தரவை ஊராட்சி, வைரவன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த தேவி தெரிவித்ததாவது:-
எங்களுக்கு சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. நானும் எனது கணவரும் வயலில் விவசாயம் செய்து வருகிறோம்.
வயலில் களைகள் எடுக்கவும் மற்றும் பிற தேவைகளுக்காக கடப்பாரை, மண்வெட்டி போன்ற உபகரணங்கள் கூடுதலாக தேவைப்பட்டது. கலைஞரின் திட்டத்தின் கீழ் இது போன்ற உபகரணங்களை மானிய விலையில் வழங்குவதாக வேளாண்மைத் துறை அலுவலர்கள் நேரிடையாக வந்து அறிவித்தனர். உடனடியாக விண்ணப்பம் செய்வதற்காக எங்களுக்கு உதவி செய்தனர்.
விண்ணப்பம் செய்த வெகு சில நாட்களிலேயே கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, மண்சட்டி மற்றும் கதிர் அறுப்பான்கள் போன்ற வேளாண் கருவிகள் அடங்கிய தொகுப்புகளை மானிய விலையில் கிடைக்கப்பெற செய்தனர்.
எங்களைத் தேடி வந்து விவசாயம் செய்ய ஊக்கப்படுத்தி நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொகுப்பு:
சே.ரா.நவீன்பாண்டியன்,பி.டெக்,எம்.பி.ஏ,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ராமநாதபுரம்.
வா.பெ.வினோத்,எம்.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), ராமநாதபுரம்.