கலைஞர் கருணாநிதி 98 வது பிறந்த நாள் விழா, கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், பீளமேடு பகுதிக்கழகம்-3, 57 வது வட்டக்கழகம், மசக்காளிபாளை யம், காந்திநகர் பகுதியில் கொண் டாடப்பட்டது.
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் கலந்து கொண்டு, கழகக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கலைஞர் கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
மேலும் கொரோனா பெருந்தொற்று நோய் தடுப்பு நிவாரண உதவியாக, பொதுமக்கள் 700 பேருக்கு காலை உணவை நா.கார்த்திக் வழங்கினார்.
மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.மாரிச்செல்வன், மா.செல்வராஜ், பீளமேடு பகுதிக்கழகம் -3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், 57 வது வட்டக் கழகப் பொறுப்பாளர் மா. சிவக்கும ரன், 57 வது வட்டக்கழகப் பொறுப்பாளர் சு.தனபால், 57 அ வட்டக்கழகப் பொறுப்பாளர் மில் தண்டபாணி, இரா.செந்தில், மகேந்திரமணி, எஸ்.கருணாகரன், கிருஷ்ணமூர்த்தி, சொக்கலிங்கம், இளைஞரணி சுபாஷ், திலக்பாபு, ராஜன், ரங்கநாதன், ஜோதி, நாகராஜ், ஜான், சிட்டிபாபு, பக்தவச்சலம் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.