fbpx
Homeபிற செய்திகள்ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்கள், வீராங்களைகளுக்கு ரூ.3 கோடி பரிசு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்கள், வீராங்களைகளுக்கு ரூ.3 கோடி பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக் கம் வெல்வோருக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்வோருக்கு ரூ.1 கோடி தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங் கில் விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அந்த நிகழ்ச்சியின் போது, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா 5 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கினார்.
அதன் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

விளையாட்டுத் துறையை விளையாட்டாக எடுத்துக் கொண்டால் அது விளையாட்டாக போய்விடும். விளையாட்டாக போய் விடக்கூடாது என்பதால் தான் விளையாட்டுத்துறை மேம் படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

விளையாட்டு வீரர்க ளுக்கு உடல் உறுதியும் ஊக்கமும் அவசியம். திமுக தேர்தல் அறிக்கையில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தோம். நி

ச்சயம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை. விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்.விளையாட்டு வீரர்களின் தேவைகளை அறிந்துள்ளதால் அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வர்கள். 12 வயதுக்குள் விளையாட்டு வீரர்களின் திறமையை நாம் அடை யாளம் கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஏழு தமிழக வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்வது மகிழ்ச்சி. ஏற்கெனவே வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 வீரர்களுக்கும் அந்த ஊக்கத் தொகை இன்று வழங்கப்படுகிறது.

உலக அரங்கில் விளையாடும் வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 3 கோடியும் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 2 கோடியும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடியும் தமிழக அரசால் வழங்கப்படும். தமிழக வீரர்களே சென்று வருக, தரணியை வென்று வருக. இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img