ஊரடங்கிலிருந்து தளர்வு மட்டுமே அளிக் கப்பட்டுள்ள நிலையில், இயல்புநிலை திரும்பியதாக நினைத்துத் தேவையின்றி வெளியில் வருபவர்களைக் கட்டுப்படுத்த வேண்டு மென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் தெருவிலங்குகளின் உணவு, குடிநீர் தேவை குறித்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் நாய்களுக்கு 2,500 கிலோ உணவு ஒதுக்கீடு செய்ய வழங்கப்பட்டு அவற்றை வழங்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. 104 குதிரைகளுக்கு 3,536 கிலோ கோதுமை வழங் கப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.
விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக உரு வாக்கப்பட்ட கணக்கில் 19 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் இருப்பிலிருந்து, சென்னை மாநகராட்சிக்கு 7 லட்சத்து 91 ஆயிரம் ரூபாயும், பிற 14 மாநகராட்சிகளுக்கு 11 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயும் வழங்கப் பட்டுள்ள தாக அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாய்க ளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான விஞ்ஞானபூர்வ மற்றும் மனிதா பிமான அடிப்ப டையில் அரசு நடவ டிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய இந்த வழக்கு விசாரணையை 3 வாரத்திற்குத் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
பின்னர் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், ஊரடங்கில் தளர்வுகள் மட் டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், வெளியில் நில வும் நடைமுறைகளைப் பார்க்கும்போது ஊர டங்கு முழுமையாக நீக்கப்பட்டதுபோல பொதுமக்கள் நடந்து கொள்வதாகத் தெரி வதாகவும், இது கொண் டாட்டங்களுக்கான நேரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், ‘கொரோனா முதல் அலை ஊரடங்கில் காவல்துறை மிகவும் கடுமையாக நடந்துகொண்டதால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டது. கடுமை காட்ட வேண்டாம் எனத் தற்போது காவல் துறையினருக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளதைப் பொதுமக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டது வெளியில் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்‘ எனத் தெரிவித்தார்.
ஆனால் நீதிபதிகள், ஊரடங்கு காலத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்ப்தைத் தடுக்க வேண்டுமெனவும், மக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைக் குறைப் பதற்காகவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை மக்கள் உணரும் வகையில், வெளியில் சுற்றித் திரியக் கூடாது என ஒலிபெருக்கிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத் தும்படியும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.