கோவை உள்ளுர் திட்டக்குழுமம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள உள்ளுர் திட் டக்குழுமங்கள், கட்டடங்கள், லே-அவுட் அனுமதி மற்றும் நில உட் பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க அதிகாரம் அளிக்கப்படுகிறது என்று சென்னை ஊரக மற்றும் நகர திட்ட இயக்குனரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் உள்ள உள்ளுர் திட்டக்குழுமத்தின் அங்கீகார அதிகார வரம்பை உயர்த்த வேண்டும் என, கோவை கிரெடாய் அமைப்பு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து கடந்த 3-ம் தேதி மனு அளித்திருந்தது.
மனுவின் அடிப்படையில், சென்னை, ஊரக மற்றும் நகர திட்ட இயக்குனரகம் கடந்த 14-ம் தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையின் படி, கோவை உள்ளுர் திட்டக்குழுமம், மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள உள்ளுர் திட்டக்குழுமங்கள், கட்டடங்கள், லே-அவுட் அனுமதி மற்றும் நில உட்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க அதிகாரம் அளிக் கப்படுகிறது.
புதிய வழிகாட்டுதல்க ளின்படி, குடியிருப்பு, வணிக மற்றும் நிறுவனங்களின் கட்டடங்கள், அதன் பரப்பளவு 2500 சதுர மீட்டர்களுக்குள் உள்ள வற்றிற்கு உள்ளுர் திட்ட குழுமம் அனுமதி வழங் கலாம். முன்பு இதன் அளவு 1500 சதுர மீட்ட ராக இருந்தது.
சிப்காட் ஃ சிட்கோ கட்டடங்கள் தவிர, தொழிற் சாலைகள் கட்டடங்களும் 2500 சதுர மீட்டர் வரை உள்ளுர் திட்ட குழுமமே அங்கீகாரம் வழங்கலாம்.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரு ராட்சி பகுதிகளில் நில உட்பிரிவுகளுக்கான அனுமதி வழங்கு வதற்கான உச்சவரம்ப 5 ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப்புற பகுதிகள் மற்றும் கிராம பஞ்சாயத் துகளில் 10 ஏக்கராக உயர்த் தப்பட்டுள்ளது.
கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, “கோவை மற்றும் பிற நகரங்கள் வேகமான பொருளாதார வளர்ச்சி பெற அரசு எடுத்துள்ள சரியான முடிவு இது.
விரைவான அனுமதி பெற்று பொதுமக்கள் பயன்பெற இது பேருதவியாக இருக்கும். அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கிறோம்,” என்றார்.
இந்த அமைப்பின் செயலர் ராஜீவ் ராமசாமி இத்தகவலை தெரிவித்துள்ளார்.



