திருப்பூர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணா, பெரியார் சிலைக்கு ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. தொடர்ந்து பெரியாயிபாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதி யோர்களுக்கு உணவு வழங் கப்பட்டது.
மதியம் திருமுருகன் பூண்டி சுவாமி விவேகானந்தா காப்பக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 12 ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மன்றத்தின் திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார் வழங்கினார்.
கொரோனா நிவாரணமாக எஸ்ஏபி தியேட்டர் ஆசார் மில் துப்பரவு தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உடன் பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வழக்கறிஞர் குமார், மனோகரன், கோவிந்தராஜ், குப்புசாமி, பாலகுமார், ராமகிருஷ்ணன், லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.