கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் பல விதமான உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது. அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை உடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உடுமலைபேட்டையில் உடுமலை பேருந்து நிலையம், மடத்துக்குளம், பள்ளபா ளையம், பாப்பனூத்து பிரிவு, ஆர்.வேலூர் பகுதிகளை சுற்றி உள்ள ஏரிப்பாளையம், யூ.கே .பி நகர், சிங்கப்பூர் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராமசாமி நகர், மடத்துக்குளம் பேருந்து நிலையம், கடத்தூர், நீலம்பூர், மடத்தூர், பள்ளபாளையம், ஜல்லிப்பட்டி, தளி, குரல்குட்டை, எரிசனம்பட்டி, ஆண்டியூர், பூலாங் கிணறு, சுண்டக்காம்பாளையம், பண்ணை கிணறு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 250 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பைகளை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சமூக சேவகி இந்திராசுந்தரம் வழங்கினார்.
அப்போது சிதிரா, மோகன், கார்த்திகேயன், வெங்கடாசலபதி, சண்முகம், செல்வகுமார், குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.